Monday, March 19, 2012

Raajaphonic FB Group Meet

Facebook Raajaphonic குழுவின் சார்பில் இசைஞானியுடன் நீண்டகாலமாக இசைத்து வரும் வயலினிஸ்ட் திரு. பிரபாகர் மற்றும் வயலினிஸ்ட் திரு. ஜெயமாணிக்கம் ஆகியோருடன் சென்னையில் மார்ச் 18ம் தேதி அன்று ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் திரு. பிரபாகர் அவர்கள் இசைஞானியுடன் வேலை செய்யும் அனுபவங்களை சுவைபடப் பகிர்ந்துகொண்டார். அவற்றில் இருந்து சில துளிகள்:

  • அன்னக்கிளி வெளிவரும் முன், இசைஞானியும் அவரது சகோதரர்களும் இணைந்து ‘பாவலர் பிரதர்ஸ்’ என்ற இசைக்குழுவை நடத்தி வந்தனர். அந்த சமயத்தில் இருந்தே இசைஞானியுடன் இசைத்து வருகிறேன்.  திரைப்படங்கள் அல்லாது பல்வேறு கச்சேரிகளிலும், நாடகங்களிலும் நாங்கள் இணைந்து இசைத்திருக்கிறோம்.


  • தளபதி படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலின் Recording Bombay’ல் உள்ள Bombay Film Lab என்ற Recording Theatre’ல் நடைபெற்றது.  பாடலுக்குக் கிட்டத்தட்ட 40 Violin, 4 Double Bass, 3 Trombone வரை உபயோகித்திருந்தார். Trumpet வாசிப்பவர்கள் கிடைக்காததால் Heavy Brass உபயோகித்தார். பாடலுக்கு Tuba வாசிப்பதற்காக Bombay Navy Band’ல் இருந்து இசைக்கலைஞர்கள் வந்திருந்து இசைத்தனர்.  ’சுந்தரி கண்ணால்’, ‘ராக்கம்மா’ ஆகிய பாடல்களுக்கு இசைஞானி Full Score எழுதி முடிக்க எடுத்துக்கொண்ட நேரம் அரை மணி நேரம் மட்டுமே.  ஆனால் ஒவ்வொரு பாடலுக்கான ரெக்கார்டிங் 3 முதல் 4 நாட்கள் நடந்தது.  முதல் நாள் Keyboard, இரண்டாவது நாள் மற்ற Instruments, Chorus எல்லாம் Mix செய்தார்கள். அடுத்த நாள் Strings Section அதற்கடுத்த நாள் Voices..! அங்கு 4 track recording செய்யுமளவிற்குத்தான் வசதி இருந்தது. ஆனால் நிறைய வாத்தியங்கள் இசைக்கவேண்டியிருந்ததால் நான்கு நான்கு Track’ஆக Overlap செய்து Recording செய்தனர்.  Strings Section Recording முடிந்தவுடன் 30 விநாடிகளுக்கு இசைக்கலைஞர்கள் யாரும் பேசவில்லை. அதன் பிறகு எழுந்து நின்று கைதட்டினர். ஏனென்றால் அந்த Sound, Composition மற்றும் Arrangement அவர்களுக்கு மிகவும் புதிது.


  • என்னுடைய Personal Experience’ல் நான் மிகவும் ரசித்தது ‘ரமணா’ படத்தின் Rerecording..! Magnificent Scoring..! உங்களிடம் சொல்லும்போதே எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கிறது (சிரிப்பு).  ரெக்கார்டிங் முடிந்த அன்று இசைஞானிக்கு நான் ஃபோன் செய்து ’மிகப் பிரமாதமாக இருந்தது’ என்று கூறினேன்.  சிரித்தார். அதே போல் Pandavas என்று ஒரு Animation Movie. அதற்கும் மிக மிக Extra ordinary Rerecording. அதே போல் சமீபத்தில் ‘Who is Afraid of Virginia Woolf?’ என்ற Play’க்கு எழுதிய Score’ம் பிரமாதமாக இருந்தது. We enjoyed playing that.

  • 80களின் இறுதியில் (கரகாட்டக்காரன், நாயகன் போன்ற படங்களுக்கு இசையமைத்த நேரத்தில்) நாங்கள் காலையில் ஸ்டுடியோவிற்கு வந்தால் இரவுதான் வீட்டுக்குச் செல்வோம். மறுநாள் மீண்டும் அதிகாலை எழும்பி 7 மணிக்கு ஸ்டுடியோவிற்கு வரவேண்டும்.  மதியம் 1 மணியில் இருந்து 2 மணி வரை உணவு இடைவேளை. அந்த சமயத்தில் சிலர் ஓய்வு எடுப்பார்கள். Relax செய்வார்கள். ஆனால் கடந்த முப்பத்தைந்து வருடங்களில், அந்த நேரத்திலும் கூட இசைஞானி ஓய்வு எடுத்து  நான் பார்த்ததில்லை.  நோட்ஸ் எழுதுவார்.. அல்லது டைரக்டரிடம் பேசிக்கொண்டிருப்பார், அல்லது புத்தகம் படித்துக்கொண்டிருப்பார். 

  • பழசிராஜா’ ரீரெக்கார்டிங் சமயத்தில் நான் உடனிருந்தேன். அப்பொழுது ஒரு காட்சியைப் பார்ப்பார். பார்த்துக்கொண்டே என்னை ‘Bar Count பண்ணிக்கொண்டே வா’ என்றார். நான் 1…2..3…4.. என்று எண்ணிக்கொண்டே வந்தேன். ஒரு 2 நிமிடக் காட்சிக்கு Score ஒரு 125 முதல் 150 Bar’க்கு எழுத வேண்டும். Symphony Score’க்கு என்று தனியாக Score Sheet இருக்கிறது. அதில் Strings Section’ல் 1st Violin, 2nd Violin, Viola, Cello, Woodwinds Section’ல் Oboe, Clarinet, Flute… மற்றும் Brass Section’ல் Trumpet, Trombone, Tuba போன்ற கருவிகளுக்கு Score எழுத வேண்டும். இது போல பல பக்கங்களுக்கு எழுத வேண்டும். இவ்வளவு விஷயங்களுக்கு Score எழுதினாலும், ஒரு சின்ன அடித்தல் திருத்தல் கூட அவரது Score Sheet’ல் பார்க்க முடியாது.
 
  • ஸ்ரீராமராஜ்யம் படத்திற்கும் ஹங்கேரி இசைக்கலைஞர்கள் இசைத்திருந்தனர். பொதுவாக எழுதப்படும் Score’ஐ Photocopy எடுத்து மற்ற இசைக்கலைஞர்களுக்குக் கொடுப்பது வழக்கம். ஆனால் சின்ன சின்ன Pieces’க்கு அவர் எழுதும்போதே என்னையும் பார்த்து எழுதிக்கொள்ளச் சொல்லிவிடுவார். அவர் அருகில் நின்று நான் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது நான் கவனித்த ஒரு விஷயம்… ஒரு கவிதை எழுதவேண்டுமென்றால் முதலில் முதல் வரியை எழுத வேண்டும்.. அதன் பின்னர் இரண்டாவது வரி.. பின்னர் அடுத்த வரி என்று செல்லும்… அப்போதுதான் ஒரு Flow இருக்கும். யாரும் எடுத்த எடுப்பில் நான்காவது வரியை எழுத மாட்டார்கள். அதே போல் ஒரு Score எழுதும்போது முதலாவது Melody Line’ஐ எழுதுவார்கள். பின்னர் அதற்குத் தகுந்த மற்ற இசைக்கருவிகளுக்கு உரிய Score’ஐ எழுதுவார்கள்.  ஆனால் அவர் Score எழுதும்போது Score Sheet’ன் நான்காவது வரியில் இருக்கும் Cello’வுக்கு முதலில் எழுதுகிறார். அதன் பின்னர் Melody Line’ல் 5th Barக்கு எழுதுகிறார்.. பின்னர் Viola Portion’ன் 12th Bar’ல் எழுதுகிறார். பின்னர் வேறு ஒரு Instrument’க்கு எழுதுகிறார். அவர் வேகத்திற்கு என்னால் எழுத முடியவில்லை. அதைவிட ஆச்சரியம் ஒரு Melody Line தெரிந்தால்தான் அதற்குத் தகுந்த மற்ற Instruments’க்கு Score எழுத முடியும். Melody’ஏ எழுதாமல் எப்படி இவரால் மற்ற கருவிகளுக்கு எழுத முடிகிறது என்பது என்னால் புரிந்துகொள்ள முடியாத விஷயம். இதில் இன்னொரு சிறப்பு இவ்வளவு விஷயங்களையும் அவர் Keyboard’ஐத் தொடாமல் எழுதுகிறார். நான் ஒரு கட்டத்தில் அவரிடம் ’எப்படி இவ்வாறு எழுத முடிகிறது?’ என்று கேட்டேவிட்டேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, ‘நான் என்ன சொல்வது? அது அப்படித்தான் எனக்கு வந்து விழுகிறது’ என்றார்.
 
  • Italy Concert’க்காக நாங்கள் Prepare பண்ணிக்கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிட்ட Piece’க்கு ‘3 in One’ என்று பெயர் கொடுத்திருந்தார். நாங்கள் Rehearsal’ல் வாசித்துப் பார்க்கும்போதுகூட எதற்காக ‘3 in One’ என்று பெயர் கொடுத்திருக்கிறார் என்று எங்களுக்கு விளங்கவில்லை. Italy சென்றபின்னர் மேடையில், ‘I want to tell you something about the reason behind naming this Piece ‘3 in One’.  It is because the entire melody is composed only in 3 Notes’ என்றார்.  அப்போதுதான் வாசிக்கும் எங்களுக்கே அது 3 ஸ்வரத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பது விளங்கியது.
 
  • Avatar படத்திற்கு இசையமைத்த James Horner, படம் ஷூட்டிங் தொடங்கி தொடர்ந்து 6 மாதங்களுக்கு டைரக்டருடன் இருந்ததாகத் ஒரு இணையதளத்தில் சொல்லியிருக்கிறார். அதன்பின்னர் பின்னணி இசைக்கென தனியாக 6 மாதங்கள் எடுத்துக்கொண்டாராம். இசைஞானி 6 மாதங்களில் 6 படங்களின் ரீரெக்கார்டிங்கை முடித்துவிடுவார். அவரைப் போன்ற வேகத்தில் யாரும் Score எழுதி நான் பார்த்ததில்லை. கர்நாடிக் மற்றும் வெஸ்டர்ன் க்ளாசிக்கல் இசையை முறைப்படிப் பயின்றிருப்பதால் எப்படி வேண்டுமானாலும் அவரால் இசையமைக்க முடியும். உதாரணத்திற்கு, ‘சிந்து பைரவி’ படத்தை Western Classical Background Score’உடன் செய்யவேண்டும் என்றாலும் செய்துவிடுவார். He is a master of Rerecording.
 
  • அவரிடம் நான் பார்த்து வியந்த மற்றொரு விஷயம் உண்டு.  ஒரு காலகட்டத்தில் வருடத்திற்கு 50 படங்களுக்கு மேல் இசையமைத்துக்கொண்டிருந்தார். அப்போதும் கூட காலை 7 to 1 கால்ஷீட்டில் ஒரு படத்திற்கு ரீரெக்கார்டிங் செய்வார். மதியம் மற்றொரு படம்.  முதல் படத்திற்கான இசை ஒரு Colour’ல் இருக்கும். மதியம் இசையமைக்கும் படத்திற்கான இசை முற்றிலும் வேறு வகையில் இருக்கும். மறுநாள் காலையில் மீண்டும் முதல் படத்திற்கு இசை. இப்போது முன்தினம் அந்தப் படத்திற்கு இசையமைத்த அதே Feel & Flavour மாறாமல் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடருவார்.
 
  • இசைஞானியின் இந்த உயரத்திற்குக் காரணம் அவரது ஓய்வறியா உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு. திரு. அக்பர் பாஷா

புகைப்படங்கள் நன்றி: திரு. தினகர் ராஜாராம்.

Saturday, March 3, 2012

இசைஞானி வியந்த ‘பால் மரியா’


இன்று French Orchestra Leader ”Paul Mauriat” அவர்கள் பிறந்த தினம் (4 மார்ச் 1925). சரி.. பால் மரியாவிற்கும் இசைஞானிக்கும் என்ன சம்பந்தம் என்று வியப்பவர்களுக்காய், 1983ல் முதல்முறையாக வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்துத் திரும்பிய இசைஞானி தன் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்ட “சங்கீதக் கனவுகள்” புத்தகத்திலிருந்து சில பகுதிகள்..

“இரண்டு மாதங்களுக்கு முன், முதன் முறையாக வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் ஒன்று செய்ய வேண்டும் என்று என் (வெளிநாட்டு) நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டனர். 

நான் இப்போது, என் வேலையைத் தவிர, வெளியில் போனால் கோயிலுக்கு மட்டுமே போகிறேன்.  வெளிநாட்டில் போய் எதைப் பார்ப்பது, இது ஒரு பெரிய கேள்விக்குறியாக நின்றது.  வெளிநாட்டிலாவது கோயிலாவது! ஆகா! மின்னல் வெட்டினாற்போல் ஒரு யோசனை.

பாக் (Bach),

பீதோவன் (Beethoven),

ப்ராம்ஸ் (Brahms),

ஹைடின் (Haydn),

மொஸார்ட் (Mozart)

- இவர்கள் போன்ற பெரிய இசை மேதைகள் வாழ்ந்த – நடந்த மண்ணை, இசைகளை உருவாக்கிய, இசை நிகழ்ச்சிகளை நடத்தி பல உள்ளங்களை மகிழ்வித்த இடங்களைத் தரிசித்தால் என்ன என்று தோன்றியது. அதற்கான முன்னேற்பாடுகள் நடந்தன.

நண்பர் Air France கோபால், பாரிஸ் நகரில் பணிபுரியும் நண்பர் ‘புரொபஸர் பாரிஸ்’ ஜமால் அவர்களை சென்னையிலேயே எனக்கு அறிமுகப்படுத்தினார்.

“உங்களுக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும்” என்றார்.

“முதற் காரியம் – எனக்கு வரவேற்பு, சொற்பொழிவு போன்ற எந்த நிகழ்ச்சிகளும் வேண்டாம்” என்றேன்.

‘சரி பின்’?

‘ஃப்ரான்ஸ் நாட்டின் Composer PAUL MAURIAT, பாரீஸ் நகரத்தில்தானே இருக்கிறார். அவரைப் பார்க்க ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று கேட்டேன்.

‘முடியும்’ என்றார்கள்.

‘பால் மரியா’ எனக்கு மிகவும் பிடித்த Composer Arranger.  ‘Arranger’ என்றால் Orchestrator என்று பொருள்.



தமிழில் மெல்லிசை என்று சொல்லக்கூடிய Light Music-ல் புதிய உத்திகளைக் கையாண்டு தற்போதைய மெல்லிசைக்கு உயிர் கொடுத்தவர் அவர். அவரைச் சந்திப்பதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்” என்றேன்.

நான் அவர் மீது வைத்திருக்கும் மரியாதையைப் பார்த்து விட்டு, “அவரைச் சந்திக்க எப்படியாவது ஏற்பாடு செய்து விடுகிறேன்” என்றார்.

நண்பர் Air France கோபால், பாரிஸ் நகரத்துக்குப் பலமுறை ‘பால் மரியா’வுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார். அவருடைய மற்ற நண்பர்களுக்கும் விஷயத்தைத் தெரிவித்து அவர்கள் மூலமாகவும் முயற்சி செய்தார்.

நண்பர் பாரிஸ் ஜமால், ‘நீங்கள் அவரைச் சந்திக்கும் முன்பு, உங்களைப் பற்றிய முக்கிய விஷயங்களை அவருக்குத் தெரிவித்தால்தான் அவர் உங்களைச் சந்திக்க விரும்புகிறாரா? இல்லையா? என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.  எனவே உங்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு ஒன்றைத் தயார் செய்து என்னிடம் கொடுங்கள்” என்றார்.

எனக்கு இதிலெல்லாம் விருப்பமில்லை என்றாலும், ‘இப்போது இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே’ என்று வருந்தினேன்.  அப்போது, நண்பர் கோபால் முன் வந்து, “ஏற்கெனவே நான் ஒன்று தயாரித்து வைத்திருக்கிறேன்.  அதைக் கொண்டுபோங்கள். அத்துடன் இளையராஜாவின் முக்கியமான பாடல்களில் சிலவற்றை எடுத்துப் போங்கள். வாழ்க்கைக் குறிப்பைவிட, அவருடைய ‘இசை’ அவரைத் தெளிவாக விளக்கிக் காட்டிவிடும்!” என்று யோசனை சொன்னார்.

எனக்கு அது சரியாகப் பட்டது.  நானே சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அதைப் பத்து பன்னிரண்டு கேஸட்டுகளில் பதிவு செய்து, ஒன்றை ஜமாலிடம் கொடுத்தேன்.  அது தவிர ‘வேத கானம்’ கேஸட் ஒன்றும், சினிமாவுக்கில்லாமல் நான் தனியாகப் பதிவு செய்த இசைக்கோர்வை அடங்கிய கேஸட் ஒன்றுமாக மூன்று கொடுத்தேன்.  இதில்லாமல், புதிதாக நான் எழுத ஆரம்பித்திருக்கிற ஒரு Experimental Music-ஐயும் புறப்படுவதற்கு முதல் நாள் Record செய்தேன்.  அது பதிவானபோதே இசைக்குழுவில் இருந்த அத்தனை பேரும் மனமாரப் பாராட்டினார்கள்.

அடுத்த நாள் என்னை எப்படியாவது மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவது என்று நண்பர்கள் கொண்ட முயற்சி வீண்போகவில்லை.  பால் மரியா 2 மணிக்கு வரச் சொல்லிவிட்டார். அரை மணி நேரம் முன்பாகவே போனோம்.

ஆனால் அவர் நமக்காக ஒதுக்கியுள்ள நேரம் 5 நிமிடம்தான். சம்மதமா என்றார்கள்.

சரி, பார்த்துவிட்டாவது வருவோம் என்ற எண்ணத்துடன், அவருக்கு அன்பளிப்பாக நான் வாங்கி வைத்திருந்த மாலை ஒன்றும், கிருஷ்ணன் சிலை ஒன்றும், கிளம்பும் முன் Record செய்த Music Cassette ஒன்றும் எடுத்துக்கொண்டேன்.

10 நிமிடம் முன்பாகவே அவருடைய வீட்டில் Composing Hall-ல் காத்திருந்தோம். ஹாலைப் பார்த்து வியந்துகொண்டிருந்தேன்.  அங்கு ஒரு Grand Piano-வும், Electronic Synthesizer மூன்றுக்கு மேலும், Music எழுதும் Manuscript பேப்பர்களும், பேனா, பென்சில்களும் Record Collection-களும் என் கவனத்தைக் கவர்ந்தன.  இவற்றைப் பார்த்து 10 நிமிடம் மட்டும்தான் என்னால் வியக்க முடிந்தது.  ஏனெனில், சரியாக 2 மணிக்கு பால் மரியா The Great உள்ளே வந்தார்.

நண்பர்கள் என்னை அறிமுகப்படுத்த, சந்தனமாலையையும், கிருஷ்ணன் சிலையையும் அன்புடன் அளித்தேன்.

என்னைப் பற்றி விசாரித்த அவர் சென்னையைப் பற்றியும், இந்திய நாட்டைப் பற்றியும், இந்திய இசையைப் பற்றியும் விசாரித்தார்.

ஆரம்பித்தேன்.  உலகிலேயே உயர்ந்த இசை கர்நாடக இசைதான். புரிந்துகொள்வது கஷ்டமாக இருப்பதால் அது சரியில்லை என்று சொல்ல முடியாது.  இசையை Develop செய்துகொண்டே போய், இதற்கு மேல் Develop செய்ய ஒன்றுமில்லை என்ற ஒரு நிலை வருமானால், அதுவே “கர்நாடக இசை” என்றேன்.

‘எப்படிச் சொல்கிறீர்கள்’? என்றார்.

“Western Music’ல் குறைந்த இடைவெளி உள்ள இரண்டு சுரங்களைச் சொல்லுங்கள்..” என்றேன்.

“C to D Flat” என்றார்.

“அதற்கும் குறைந்த இடைவெளி உள்ள சுரங்களை எங்கள் முன்னோர்கள் கண்டுபிடித்து வெவ்வேறு ராகங்களில் வெவ்வேறு கோணங்களில் அமைத்து வைத்திருக்கிறார்கள்..” என்று எனக்குத் தெரிந்த அளவில் பாடியும் காட்டி விளக்கினேன்.

அவர் புரிந்துகொண்டு, “ஆம்! நீங்கள் சொல்வது உண்மைதான்” என்றார்.

“இதைக்கூட உங்கள் நாட்டில் Micro Tones என்று சொல்வார்கள்’ என்றேன்.

“ஆம்! இதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.  ஆனால் விளங்காத விஷயம்.. Indian Rhythms தான்..! Oh My God..!” என்று வியந்தார்.

அவர் ஹிந்துஸ்தானி தபலாவையும், நம் ஊர் மிருதங்கத்தையும், தவிலையும் எங்கோ கேட்டிருப்பார் போலிருக்கிறது. அதனால்தான் அப்படி ஒரு பிரமிப்பு அவருக்கு.

“ஏன் நீங்கள் உங்களது Orchestration’ல் எவ்வளவோ தாளக் கோவைகளை interesting’ஆக புகுத்தியிருக்கிறீர்கள்..! அப்படிப்பட்ட உங்களுக்கு Indian Rhythms அப்படி ஒன்று கஷ்டமே இல்லை” என்றேன்.

“Oh I can’t..” என்றார்.

உடன் எடுத்துச் சென்றிருந்த கேஸட்டைக் காட்டி, “இதை நான் உங்களுடன் கேட்க விரும்புகிறேன்” என்றேன்.  “Oh Yes..!” என்று கீழே உள்ள Listening Room’க்கு அழைத்துச் சென்றார்.

3 Pieces Record செய்திருந்தேன்.  Cassette On பண்ணியதுதான் தாமதம், கண்களை மூடிவிட்டார். மியூஸிக் முடிந்தபின்னர்தான் கண்களைத் திறந்தார்.

“Something Different and wonderful” என்று ஆரம்பித்தவர், நன்றாக, மனம் திறந்து பாராட்டினார். அதையெல்லாம் விவரமாக எழுதலாம் என்றாலோ, என் மனசாட்சி, ‘டேய்! முதலிலேயே இது சுயபுராணம் அல்ல என்று பெரிசா பீத்திக்கிட்டியே! இப்போ..?? ஹி.. ஹி..” என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டது.

Cassette முடிந்ததும், “இதை நான் வைத்துக்கொள்ளலாமா?” என்று கேட்டார்.

என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  “இதை நான் உங்களுக்காகவே எடுத்து வந்தேன்” என்று அவருக்குக் கொடுத்துவிட்டேன்.

அதில்…

அப்படி என்ன இருந்ததென்றால், நம் ஊர் Classical-ஐயும், அவர்கள் ஊர் Classical’ஐயும் blend செய்து ஒரு ராகமாலிகை Concerto for Orchestra பண்ணியிருந்தேன்… அவ்வளவுதான்.

மாயாமாளவகெளளையில் ஒரு “Mad Mod Mood Fugue” எனக்குப் பிடித்தமான Classical Composer ஆன Bach கம்போஸ் செய்த Bouree in E Minor’க்கு ஒரு Counter Melody கம்போஸ் செய்திருந்தேன்.  இதைப் படித்தபின் இசை தெரிந்தவர்கள் இனிமேல் அந்த ஐடியாவை வைத்துக்கொண்டு, இதைப்போல் வேறு ‘பீஸ்’ கம்போஸ் பண்ணலாம்.  ஆனால் ‘பால் மரியா’ சொல்லிவிட்டார்…. ”You are the First Man” என்று, இது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை. (சீச்சீ..! என் மனசாட்சி வேறு இடையில்) ஹி.. ஹி..!

பால் மரியா எனக்காக ஒதுக்கிய ஐந்து நிமிடம் முடிந்து, ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது.  P.A. வேறு இடையிடையே நேரத்தைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தார்.  அதைப் பற்றியெல்லாம் பால் மரியா கவலைப்படவில்லை.

“புதிதாக எத்தனை ரெக்கார்ட் cut பண்ணினீர்கள்?” என்றேன்.

“புதிய ரெக்கார்ட் cut செய்தது, 3 வருடங்களுக்கு முன்” என்று பதில் வந்தது.

அவர்கள் ஒரு ரெக்கார்ட் வெளியிட்டால் எவ்வளவோ மில்லியன் டாலர்ஸ் வருமானமாக, ஆயுள் பூராவும் வந்து கொண்டிருக்கும்.

இங்கு..??

”உங்களுக்குப் பிடித்த Classical Composer யார்?” என்றேன்.

யோசிக்காமல், ‘Bach’ என்றார்.

வேறு யாராக இருக்க முடியும்? எனக்குப் பிடித்தவரையே இவரும் சொல்கிறாரே என்று வியப்பதற்கு முன்..

”You See! இப்போது Bach கம்போஸ் செய்த Toccata in D Minor’ஐ நான் Orchestration பண்ணிக்கொண்டிருக்கிறேன்.  I can’t change even a single note!” என்றார்.  அசந்தே போனேன்.

அதற்கு அர்த்தம்: வேறு எந்த கம்போஸர் ஆனாலும், அவர்கள் படைப்பில், எதை வேண்டுமானாலும் மாற்றி விடலாம்.  “Bach” கம்போஸிஷனில் மட்டும் ஒரு சுரத்தைக் கூட மாற்ற இயலாது என்று அவர் சொன்னது Bach’ன் மேல் எனக்கிருந்த மரியாதையையும், பக்தியையும் அதிகப்படுத்தியது.

Bach வாழ்ந்த ‘லைப்ஸிக்’ (Leipzig) என்ற இடத்திற்கு நான் போகப் போவதாகச் சொன்னபோது மகிழ்ந்து போனார்.  வாழ்த்தினார்.  விடை பெறுவதற்கு முன், ‘இந்தியாவுக்கு வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தேன்.

“வருவதானால் உங்கள் Recording’ஐப் பார்ப்பதற்கு மட்டுமே வருவேன்” என்றவர் – எந்த மாதம் நன்றாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டு, அதன் பேரில் ஜனவரி மாதத்தில் சென்னை வருவதாக ஒப்புக்கொண்டார்.  அதற்கு முன் ஹாங்காங்கில் டிசம்பர் 5, 6 தேதிகளில் அவரை நான் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  நானும் சம்மதித்து 2 மணி நேரம் அவருடன் அளவளாவுவதற்கு வாய்ப்பளித்ததற்காக நன்றி தெரிவித்து அனைவரும் விடை பெற்றுக்கொண்டோம்.

வீட்டுக்கு வெளியே வந்ததும் நண்பர்களின் மகிழ்ச்சி அளவில்லாமல் கரைபுரண்டது.  அதற்குக் கரையாக நானிருந்து தடுத்துக்கொண்டேன்.

அவர்கள் சொன்னது: “ராஜா சார்..! உங்களுக்குத் தெரியாது சார்! விஷயம் இல்லாத ஆளாக இருந்திருந்தால் இவர்கள் உங்களுடன் பேசியிருக்கவே மாட்டார்கள்.  மாலையையும் கேஸட்டையும் வாங்கிக்கொண்டு "We will see some other time" என்று வழியனுப்பி வைத்திருப்பார்கள் சார்.  உங்களிடம் ஏதோ விஷயம் இருக்கு” என்றார்கள்.

நானும் உணர்ந்து கொண்டேன்.  ஓகோ! நம்மிடமும் ஏதோ விஷயம் இருக்கிறது என்று.  ஆனால் என் மனசாட்சி இருக்கிறதே (முட்டாள்! முட்டாள்!.. பயங்கரச் சிரிப்பு, பைத்தியக்காரச் சிரிப்பு சிரிக்கிறது).
******************************************************************************************************************
”பால்நிலாப் பாதை”, “சங்கீதக் கனவுகள்”, “வழித்துணை” ‘இளையராஜாவின் சிந்தனைகள்” “வெட்டவெளிதனில் கொட்டிக்கிடக்குது” என ஐந்து பகுதிகளைக் கொண்ட இசைஞானியின் மொத்தத் தொகுதிதான்.. “யாருக்கு யார் எழுதுவது”.  இசைஞானியின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம், இதுபோன்ற இன்னும் பல அற்புதமான அனுபவங்களை உள்ளடக்கிய இசைஞானி எழுதிய “யாருக்கு யார் எழுதுவது” (பக்கங்கள்: 511, விலை: ரூ. 250/-) என்ற பொக்கிஷம் கிடைக்குமிடம்:

“கவிதா பப்ளிகேஷன்ஸ்”
தபால் பெட்டி எண்: 6123
8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார்
தி. நகர்., சென்னை 600 017

Paul Mauriat கேட்டு வியந்த இசைஞானியின் Mad mod mood fugue  பற்றி மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.  நன்றி: நண்பர் Kamal.