Monday, August 9, 2010

அம்மா ஆகாயம் விட்டு

http://www.youtube.com/watch?v=Dxv9CwCpJFo

பாடல் : அம்மா ஆகாயம் விட்டு
பேழை : The Real Salute
பாடியவர்கள் : இசைஞானி
எழுதியவர் : இசைஞானி
இசை : இசைஞானி

அம்மா ஆகாயம் விட்டு,
மண்ணில் வந்ததேனோ?
மண்ணில் வந்ததேனோ?

அந்தோ! என் அன்னை தேகம்,
காயம் கொண்டதேனோ?
காயம் கொண்டதேனோ?

யார் துளைத்தது உன் நெஞ்சம் தன்னையே?
காண்பதற்கு ஓர் நாதியில்லையே?

அம்மா ஆகாயம் விட்டு,
மண்ணில் வந்ததேனோ?
மண்ணில் வந்ததேனோ?

1. வெஞ்சிறையில் வெந்ததெல்லாம்,
துன்பமென்று சொல்லுவதா?
முன்பிருக்கும் இந்த நிலை
இன்பம் என்று கொள்ளுவதா?
உன் கொடியைத் தூக்கி வந்தால்,
உயிர் பறிப்பார் ஓடியபின்,
கண்கள் தனைக் கந்தல் என்று,
காணும் ஒரு துன்பமும் ஏன்?
அடடா! அனாதையைப் போல் அன்னை மண்ணிலே,
கிடந்தால் உன் பிள்ளை நெஞ்சம்
பற்றியெரியாதோ? - அம்மா

2. உயிருடனே நடை பிணமாய்,
வாழ்ந்திருந்து பழகியதால்,
கொல்லும் உந்தன் கோலம் கண்டும்
உயிர் பிரியாதாடுதம்மா!
நேற்று அமாவாசைதனில்,
விடியல் வரும் என்றிருந்தோம்!
நாளும் அமாவாசைகளே
ஞாயிறையும் மூடிடவோ?
அம்மா உன் பாரம் தன்னை கீழே இறக்குவேன்!
நெஞ்சில் நீரோடும் உன்னை
வானில் ஏற்றி வைப்பேன்! - அம்மா

ஒரு சில வருடங்களுக்கு முன் இசைஞானி இசையில் வெளிவந்த இந்தப் பாடல் அதிகம் கவனிக்கப் படாமல் போயிற்று. தொலைக்காட்சியிலும் கூட ஒரு சில முறை மட்டுமே ஒளிபரப்பப்பட்ட ஞாபகம்! [பாடலைப் பார்க்க http://www.youtube.com/watch?v=Dxv9CwCpJFo என்ற தளம் செல்க! 3:48-ல் இசைஞானியின் முன்னுரையுடன் பாடல் துவங்குகிறது]. ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட இந்தப் பாடலில் கிரண் பேடி ஐ.பி.எஸ். நடித்திருக்கிறார். அலாதியான Orchestration இல்லை! வியப்பூட்டும் இடையிசையும் இல்லை! இந்தப் பாடலின் உள் எட்டிப்பார்க்க வழி செய்யும் ஒற்றைச் சாளரம், உயிரை அறுக்கும் இசைஞானியின் குரல் மட்டுமே! சுதந்திர தினத்திற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் இந்தச் சூழலில், இந்தப் பாடலை இதுவரைப் பார்த்திராத இசைஞானி பக்தர்களுக்காகப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி! அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்! வந்தே மாதரம்!

No comments:

Post a Comment