Tuesday, June 8, 2010

அடி ஆத்தாடி








பாடல் : அடி ஆத்தாடி

படம் : கடலோரக் கவிதைகள்
பாடியவர்கள் : இசைஞானி, எஸ். ஜானகி
எழுதியவர் :
இசை : இசைஞானி

அடி ஆத்தாடி ………….

அடி ஆத்தாடி!
இள மனசொண்ணு ரெக்க கட்டி பறக்குது சரிதானா?
அடி அம்மாடி!
ஒரு அல வந்து மனசில அடிக்கிது அதுதானா?
உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆக யாரோ காரணம்!! – அடி ஆத்தாடி

1. மேலே போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ?
ஒன்னப் பாத்து அலைகள் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ?
இப்படி நான் ஆனதில்ல! புத்தி மாறிப் போனதில்ல!
முன்னப் பின்ன நேர்ந்ததில்ல! மூக்கு நுனி வேர்த்ததில்ல!
கன்னிப் பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச் சண்ட கண்டாயோ?
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம் பூச்சிப் பார்த்தாயோ?
இசை கேட்டாயோ? ஓ ஓஓ….

2. தாகப் பட்ட நெஞ்சுக்குள்ளே ஏகப்பட்ட சந்தோஷம்!
உண்மை சொல்லு பொண்ணே என்ன என்ன செய்ய உத்தேசம்?
வார்த்தை ஒண்ணு வாய் வரைக்கும் வந்து வந்து போவதென்ன?
கட்டு மரம் பூப்பூக்க ஆசப்பட்டு ஆவதென்ன?
கட்டுத்தறி காள நானே! கன்னுக்குட்டி ஆனேனே!
தொட்டுத் தொட்டு தென்றல் பேச தூக்கம் கெட்டுப் போனேனே!
சொல் பொன்மானே! ஏ ஏஏ…. – அடி ஆத்தாடி.

வழக்கமாகப் ஒரு Prelude உடன் ஆரம்பிக்கும் எல்லாப் பாடல்களைப் போல் இல்லாமல் எஸ்.ஜானகியின் “அடி ஆத்தாடி..”-யுடன் பாடல் ஆரம்பிக்கிறது. அதன் பின்னர் Prelude துவங்குகிறது. [இசைஞானி Prelude-ல் Main Piece-க்கு என்ன Instrument உபயோகித்திருக்கிறார்? Oboe?? தெரியவில்லை! இப்படி இந்தப் பாடல் முழுவதும் ஏகப்பட்ட சந்தேகங்கள் எனக்கு! தெரிந்தவர்கள் விளக்குக!]. Prelude-ன் முடிவில் வரும் Keyboard Bells Piece, Keyboard வாசிப்பவர்களுக்கான சிறந்த Fingering Exercise. பல்லவி துவங்கி முதல் வரி முடிந்தடும் “இள மனசொண்ணு” வரியில் Female Chorus Voices சேர்ந்து கொள்கின்றன. அதன் பின்னர் ‘அடி அம்மாடி!-யில் இடைவெளி விட்டு, மீண்டும் “ஒரு அல வந்து” வரியில் Female Chorus. ஒவ்வொரு Voice-ஐயும் உற்றுக் கேட்டால், எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த Harmony-ஐ ஒருவர் உருவாக்கி இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. [ஆனால் இசைஞானி Just like that!!! ஒரு நிமிஷத்தில் அவ்வளவு Voices-க்கும் Notation எழுதி இருப்பார் என்பது நிச்சயம்!!]. இதே போல் Male Chorus Voices எல்லாம் இசைஞானியின் குரலாகவே எனக்குக் கேட்கிறது! [எல்லா parts-ம் அவரே பாடியிருக்கிறாரோ?] அதே போல் “உயிரோடு” என்று இசைஞானி ஆரம்பிக்கும் இடத்தில் Rhythm almost நின்று விடுகிறது. அதன் பின்னர் மீண்டும் ‘அடி ஆத்தாடி’-யில் தான் Rhythm சேர்ந்து கொள்கிறது. [Rhythm Section-ல் தபலாவுடன் ஒலிக்கும் மற்றொரு தோல் வாத்தியம் என்ன? என் அறிவுக்கு எட்டவில்லை] “இவன் மேகம் ஆக யாரோ காரணம்!!” என்ற வரியில் ‘யாரோ’ என்ற இடத்தில் ஒலிக்கும் Bass Guitar-ஐ கேட்கும்போதெல்லாம் காற்றில் மிதக்கத் துவங்கி விட்டேனோ, என்று எனக்குத் தோன்றும்.

இந்தப் பாடல் அமையப் பெற்றிருக்கும் Pattern-ல் இசைஞானி செய்திருக்கும் மற்றொரு Experimentation Second Interlude. வழக்கமாக முதல் பல்லவி முடிந்து 1st Interlude வரும். அதன் பின் முதல் சரணம், அது முடிந்து மீண்டும் பல்லவி, அதன் பின் 2nd Interlude. அதன் பின் இரண்டாம் சரணம் பாடி பல்லவி வந்து பாடல் முடியும். இந்தப் பாடலில் சற்றே வித்தியாசமாக முதல் சரணம் முடிந்து மீண்டும் பல்லவிக்குப் பாடல் செல்லாது. நன்றாகக் கவனித்தால் முதல் சரணம் முடிந்த உடனேயே, ஒரு Flute Bit-க்குப் பின்னர் ல..ல. ல..ல..லா…. என்று எஸ். ஜானகி ஒரு Humming-ஐ ஆரம்பிக்க (ஹம்மிங் முழுவதிலும் Female Voices-ன் மயங்க வைக்கும் Harmony), அதன் பின்னர் Direct-ஆக 2nd Interlude துவங்கி, இரண்டாம் சரணம் பாடப்படும். அது முடிந்த பின்தான் மீண்டும் பல்லவி பாடப் படும்.

அதே போல சரணத்தின் முடிவில் “சொல் பொன்மானே” என்று இசைஞானி பாடி முடித்து ஏ!ஏ! ஏ!!... என்று ஒவ்வொரு Note-ஆக கீழே இறங்கி வரும் இடத்தில் பின்னால் ஓடி வரும் Violin-கள் அவர் குரலுடன் இணைந்து (Contrast-ஆக?) ஒவ்வொரு Note-ஆக மேலே ஏறிச் செல்லும் அழகு அற்புதம்!!

C Minor Scale-ல் அமையப் பெற்றிருக்கும் இந்தப் பாடலில் புதிதாகக் கற்றுக் கொள்ள எனக்கு இரண்டு Chords கிடைத்தன. ஒன்று G 4th ! மற்றொன்று C Minor 6th !! [இசை தெரிந்தவர்கள் என்னைப் பார்த்து நகைக்க வேண்டாம்! என் Level-க்கு இவை இரண்டும் ரொம்ப Advanced Chords]. இனி கொஞ்சம் Guitar அல்லது Keybaord வாசிப்பவர்களுக்காக இந்தப் பாடலில் எனக்குத் தெரிந்த வரையிலான Chords Application-ஐக் கீழ்க்காண்க:-

அடி / Cm ஆத்தாடி!
இள மனசொண்ணு ரெக்க கட்டி பறக்குது சரிதா / G4th னா?
அடி / Cm அம்மாடி!
ஒரு அல வந்து மனசில அடிக்கிது அதுதா / G4th னா?
/ உயி / Cm6 ரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம்
இவன் / Cm மேகம் ஆக /G# யாரோ கார / Cm ணம்!!

/Cm மேலே போகும் / D# மேகம் எல்லாம் கட்டுப்பட்டு / Cm ஆடாதோ?
ஒன்னப் பாத்து / D# அலைகள் எல்லாம் மெட்டு கட்டி / Cm பாடாதோ?
/ Cm இப்படி நான் / Cm6 ஆனதில்ல! / Cm புத்தி மாறிப் / Cm6 போனதில்ல!
/ Cm முன்னப் பின்ன / Cm6 நேர்ந்ததில்ல! / Cm மூக்கு நுனி / Cm6 வேர்த்ததில்ல!
/ G கன்னிப் பொண்ணு கண்ணுக்குள்ள /G# கத்திச் சண்ட / Cm கண்டாயோ?
/ G படபடக்கும் நெஞ்சுக்குள்ள /G# பட்டாம் பூச்சிப் / Cm பார்த்தாயோ?
இசை / Am கேட்டாயோ? / Cm ஓ ஓஓ….

எங்கேனும் தவறுகள் இருந்தால், அல்லது இன்னும் Advanced Chords apply ஆவதாக உங்களுக்குத் தோன்றினால் Comment செய்யவும். உங்களுக்காக Keyboards Chords-ஐ Picture Files-ஆக இணைத்துள்ளேன்.

பாடலின் ராகம் தேடி அலைந்த பொழுது இரண்டு விதமான விடைகள் கிடைத்தன. “விஜய நாகரி! இது 59ஆவது ‘மேளகர்த்தா’வான ‘தர்மவதி’யின் ஜன்ய ராகமாகும். உபாங்க வகையைச் சேர்ந்த இந்த ராகத்தைப் பாட அதிகாலை நேரம் உகந்ததாகும்” என்றது ஒரு தளம். இல்லை இல்லை! “சிவரஞ்சனி” [S R2 G2 P D2 S I S D2 P G2 R2 S] என்றது மற்றொரு வலைத்தளம். இரண்டும் ஒன்றா? அல்லது Sister Ragas-ஆ? எது சரி? அதுவும் விளங்கவில்லை.

எது எப்படியோ! இந்தப் பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம் உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம் மனதில் உண்டாவது திண்ணம்!!

No comments:

Post a Comment