Monday, June 7, 2010

ஊரு விட்டு ஊரு வந்து

பாடல் : ஊரு விட்டு ஊரு வந்து

படம் : கரகாட்டக்காரன்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், கங்கை அமரன்
எழுதியவர் : கங்கை அமரன் (?)
இசை : இசைஞானி

ஊரு விட்டு ஊரு வந்து, காதல் கீதல் பண்ணாதீங்க!
பேரு கெட்டு போனதின்னா நம்ம பொழப்பு என்னாகுங்க?
விட்டுடு தம்பி! இது வேணாம் தம்பி!
இத்தன பேரு வீடு ஒங்கள நம்பி! – ஊரு விட்டு

1. அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க
தப்பாக எண்ண வேணாம்!
பொண்ணால கெட்டு போவேனோ என்று
ஆராய்ச்சி பண்ண வேணாம்!
ஊருல ஒலகத்துல எங்க கத
போலெதும் நடக்கலையா? (ரப்பப் பப்பப்பா!)
வீட்டையும் மறந்துபுட்டு வேற ஒரு
நாட்டுக்கு ஓடலையா? (ரப்பப் பப்பப்பா!)
மன்மத லீலையை வென்றவருண்டோ?
இல்லே! இல்லே! ஏ!
மங்கையில்லாதொரு வெற்றியும் உண்டோ?
இல்லே! இல்லே! ஏ!
மன்மத லீலையை வென்றவருண்டோ?
மங்கையில்லாதொரு வெற்றியும் உண்டோ?
காதல் ஈடேற பாடு என் கூட – ஊரு விட்டு

2. ஆணா பொறந்தா எல்லாரும் பொண்ண
அன்பாக எண்ண வேணும்!
வீணா திரிஞ்சா ஆனந்தம் இல்ல
வேறென்ன சொல்ல வேணும்?
வாழ்க்கைய ரசிக்கணுன்னா வஞ்சிக்கொடி
வாசன பட வேணும்! (ரப்பப் பப்பப்பா!)
வாலிபம் இனிக்கணுன்னா பொண்ண கொஞ்சம்
ஆசையில் தொட வேணும்! (ரப்பப் பப்பப்பா!)
கன்னிய தேடுங்க கற்பன வரும்!
ஆமா ! ஆமாமா!
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்!
ஆமா ! ஆமாமா!
கன்னிய தேடுங்க கற்பன வரும்!
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்!
காதல் இல்லாம பூமி இங்கேது? – ஊரு விட்டு

மனதளவில் நான் எப்பொழுதெல்லாம் ரொம்ப depressed-ஆக feel பண்ணுகிறேனோ அப்பொழுதெல்லாம் இந்தப் பாடலை ஒரு முறை கேட்பேன். Prelude Rhythm Patternஐக் கேட்ட உடனேயே, அப்படி ஒரு Energy உடலில் வந்து விடும். பாடலின் Prelude-ஐ இசைஞானி அமைத்திருக்கும் விதமே ரொம்ப Peculiar!! நாட்டுப்புற மேளச் சத்தமும், Western Drums-ம் கலந்து ஒன்றன் பின் ஒன்றாய் ஒரு 8 Bar-க்கு ஒலிக்க, அதன் மேல் பின்னர் Keyboard Chord உடன் துவங்கி, ஒரு பக்காவான Folk Style-ல் Rhythm Pattern அதனுடன் கைகோர்க்க, நாகஸ்வரத்தில் (?) Prelude Piece!! அந்த Piece-ஐ கேட்டவுடனேயே உடலில் தூங்கிக் கொண்டிருக்கும் Cells எல்லாம் படாரென்று முழித்துக் கொள்ளும்.

பல்லவி முழுவதும் இசைஞானி அமைத்திருக்கும் “பப்பப்பா!” Male Chorus ஒரு Typical Western Harmony. சரணத்தில் மேளச் சத்தம் குறைந்து Tabla-வில் Rhythm Pick up ஆகி பாடலுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது. பின்னர் மீண்டும் பல்லவி வரும்பொழுது Tabla விடை பெற்றுக் கொள்ள, மேளம் சேர்ந்து கொள்ளுகிறது. 2nd Interlude-ஐ நன்றாக கவனியுங்கள். மேளத்திற்கும் Drums-க்கும் இடையில் நடக்கும் ஒரு Naughty Conversation அற்புதம்!!

ஜெயா டி.வி.யின் ‘பண்ணைப்புரத்திற்கு பத்மபூஷண்’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற திரு கங்கை அமரன் அவர்கள் இந்தப் பாடலைக் குறித்துக் கூறும்பொழுது:-

‘கரகாட்டக்காரன்’ படத்தில் ‘இந்த மான் எந்தன் சொந்த மான்’ பாட்டில் தான் உங்களுக்கு Electronic Keyboard Bells சத்தம் கேட்கும். மற்றபடி எல்லாப் பாடல்களுக்கும் இசைஞானி Original Instruments-ஐ பயன்படுத்தினார். அந்த நேரத்தில் அண்ணன் (இசைஞானி) செய்த எல்லா படங்களிலும் Western Beats எல்லாம் mix பண்ணிக் கொடுப்பார்! கரகாட்டக்காரனில் அது total-ஆக இருக்கக் கூடாது, Real Instruments (Manual Instruments) வேண்டும் என்று சொல்லி பாடல்களை அமைத்தோம். இந்தப் பாடலைப் பொருத்தவரையில் ‘பக்கத்து ஊர் திருவிழாவிற்கு ஒரு Band Group போய்கொண்டிருக்கும்! அவர்களை நிறுத்தி வைத்து இந்தப் பாட்டைப் பாடுகிறார்கள்’ ஒரு Western Orchestra மாதிரி இதை பண்ணலாம்’ என்றுதான் முதலில் யோசித்து வைத்திருந்தோம். அதன் பின் அண்ணன் (இசைஞானி), ‘வேண்டாம்! அது Colour மாறி விடும்’ என்று சொல்லி, பாடுபவர்கள் (ராமராஜன் & கோ) சங்கீதக்காரர்கள் என்பதால் பின்னால் ‘பப்பப்பா..’ Humming எல்லாம் அமைத்துக் கொடுத்தார். இந்தப் பாடல் ஒரு Folk Song-ஆக இருந்தாலும், இதன் பின்னால் வரும் ‘பப்பப்பா..’ Humming பக்காவாக Western-ல் கொடுத்தார்” என்று கூறினார்.

வழக்கம்போல் ராகம் தேடி நெட்டுலாவியபொழுது, பாடல் ‘ஷண்முகப்ரியா’ என்றது ஒரு வலைத்தளம் [S R2 G2 M2 P D1 N2 S | S N2 D1 P M2 G2 R2 S]. அதிலும் இந்த ராகம் ‘Best Suited for Devotional Feel’ என்று விளக்கம் வேறு! (உ.ம். பழம்பெரும் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் அவர்கள் ‘திருவிளையாடல்’ படத்திற்காக இசையமைத்த ‘பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா!”). ஆனால் இசைஞானி இந்த ராகத்தை ஒரு Folk Song-ல் பயன்படுத்தி, அதனுடன் Western Chorus Harmony-ஐ கலந்து கொடுத்தது, பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி தேனில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்த சுவை!!

1 comment:

  1. //மேளத்திற்கும் Drums-க்கும் இடையில் நடக்கும் ஒரு Naughty Conversation அற்புதம்!!//
    I love this song more for this piece.

    ReplyDelete