Monday, June 7, 2010

காதல் கவிதைகள் படித்திடும்

பாடல் : காதல் கவிதைகள் படித்திடும்

படம் : கோபுர வாசலிலே
பாடியவர்கள் : எஸ்.பி.பி., சித்ரா
எழுதியவர் :
இசை : இசைஞானி

Yes I love this Idiot! I love this lovable Idiot!!!!!!!!!!!!

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்!
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்!
இதயம் இடம் மாறும்! இளமை பரிமாறும்!
அமுதும் வழிந்தோடும்! அழகில் கலந்தாட! - இதந்தரும் காதல்..

1. கைவீசிடும் தென்றல்! கண் மூடிடும் மின்னல்!
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ?
பண் பாடிடும் சந்தம்! உன் நாவினில் சிந்தும்!
அது மழையோ புனலோ நதியோ கலையழகோ?
மேகம் ஒன்று நேரில் இன்று வாழ்த்த வந்ததடி!
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி!
இது தொடரும் வளரும் மலரும்!
இனி கனவும் நினைவும் உனையே ! தொடர்ந்திடும் - காதல்

2. பூமாலைகள் கொஞ்சும்! பாமாலைகள் கெஞ்சும்!
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை!
தோள் சேர்ந்திடும் கங்கை! செவ்வாழையின் தங்கை!
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை!
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா?
காதலுக்குக் காத்திருந்து காட்சி தந்ததோ?
இனி வருவாய் தருவாய் மலர்வாய்!
எனை உயிராய் உறவாய் தொடர்வாய்! தினந்தினம் – காதல்

காதலியின் ‘Yes I Love this Idiot..” அலறலுடன் இந்தப் பாடல் துவங்குகின்றது. தன் மனதிற்குள் மறைத்து வைத்திருந்தக் காதலை, காதலன் கண்டுபிடித்துவிட்ட ஆனந்த அதிர்ச்சியில், பலர் முன்னிலையில் தன் காதல் வெளிப்பட்டு விட்ட வெட்கத்தில், காதலி அலறிக் கொண்டு காதலைச் சொல்லும் ஒரு அற்புதமான Situation. ‘I love this Lovable Idiot!!!!!!!!!!’ கதறலுக்குப் பின், நம் மனதில் வரையப்போகும் இசைக் கோலத்திற்கு இசைஞானி வயலின்களைத் தெளித்து அழகூட்டியிருப்பார். வயலின்களின் தெளிப்பு முடிந்து, புல்லாங்குழல் Piece உடன் புள்ளி வைத்து, கோவில் மணியோசையுடன் (என்ன Instrument-ஓ தெரியவில்லை) இசைக் கோலம் உயிர் பெறத் துவங்கும். இப்பாடலின் Prelude-ல் இசைஞானி அமைத்திருக்கும் Grand Orchestration.. வாய் பிளந்து கேட்கத்தான் முடியும். வர்ணிக்க முடியாது.

பல்லவியை எஸ்.பி.பி பாடி ‘இதம் தரும்’ என்ற வரியில் முடித்து ‘காதல் கவிதைகள்’ பதத்தின் “கா….”வை மட்டும் பாடி, சித்ராவிடம் கொடுக்க, அவர் ‘காதல் கவிதைகள்’ என்று ஆரம்பிக்கும் அந்த Transition.. முகத்தில் முத்தமிடும் மெல்லிய சாறல்!

First Interlude Keyboard ‘க்ளிங் க்ளிங்’ உடன் ஆரம்பிக்கிறது. சரியாக 5 வினாடிகள் மட்டுமே வரும் இந்த சாதாரண Keyboard ‘க்ளிங் க்ளிங்’-கிற்கு இசைஞானி அமைத்திருக்கும் Counterparts-களில் அவரின் மெனக்கெடல், இசை மீது அவர் கொண்டுள்ள காதல்!! அதன் பின் Flute-ம் Synthesizer-ம் ஒன்றுடன் ஒன்று கரம் பற்றி, சிரித்துக் கொண்டே குதித்தோடும் Conversation, இசைஞானி மட்டுமே கையாள இயலும் ஒரு வித்தை. இது முடிந்து வரும் வயலின் Piece… Icing on the Cake.

இரண்டாவது Interlude வெறும் தாளத்துடன் (வேறு Rhythm Pattern-ல்) ஆரம்பிக்கிறது (Congo என்று நினைக்கிறேன்). அதன் பின் வரும் Flute Piece முடிந்து வரும் ஒரு சின்ன Keyboard Bit, இசைஞானியின் அழகு Shift.

பாடல் அமையப் பெற்றிருக்கும் ராகம் மாயாமாளவகெளளை! [S R1 G3 M1 P D1 N3 S | S N3 D1 P M1 G3 R1 S]. ‘அரண்மனைக் கிளி’ படத்தில் வரும் ‘என் தாயென்னும் கோயிலை’ பாடலில் ‘சோகம்’ சொல்ல இந்த ராகத்தை உபயோகித்த இசைஞானி இந்தப் பாடலில் ‘காதல்’ சொல்ல உபயோகித்திருக்கிறார். மாயாமாளவகெளளையில் இசைஞானி பின்னியிருக்கும் இந்த இசைச்சரம் வெளிப்படுத்தும் காதல் குஷிதான் எத்தனை? காதலித்துக் கொண்டிருந்தால் காதலியின் மடியில் படுத்துக் கண்களை மூடிக் கொள்ளுங்கள். அவள் உங்கள் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த ரம்மியமான சூழலில் இந்தப் பாடலைக் கேளுங்கள். ஒரு முறை கேட்டு நிறுத்த இயலாது. மீண்டும் கேளுங்கள். காதலில் மூழ்குங்கள்! பாடலைக் கேட்டு முடிக்கும்பொழுது இன்னும் அதிகமாக அவளைக் நேசிக்கத் துவங்கியிருப்பீர்கள்.

No comments:

Post a Comment