Monday, June 7, 2010

நான் தேடும் செவ்வந்திப் பூவிது

பாடல் : நான் தேடும் செவ்வந்திப் பூவிது

படம் : தர்ம பத்தினி
பாடியவர்கள் : இசைஞானி,
எழுதியவர் :
இசை : இசைஞானி

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்! போவோம் இனி காதல் தேசம் (2)

1. பறந்து செல்ல வழியில்லையோ?
பருவக் குயில் தவிக்கிறதே?
சிறகிரண்டும் விரித்து விட்டேன்
இளம் வயது தவிக்கிறதே!
பொன் மானே என் யோகம் தான்
பெண்தானோ சந்தேகம் தான்!
என் தேவீ! ஆ…..
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
உன் கனி விழுமென தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு! ராஜாவே யார் மூச்சு?

2. மங்கைக்குள் என்ன நிலவரமோ?
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ?
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ?
இன்றைக்கும் அந்த சுகம் வருமோ?
தள்ளாடும் பெண் மேகம் நான்
எந்நாளும் உன் வானம் நான்!
என் தேவா ஆ………
கண் மலர் மூடிட ஏன் தவித்தேன்?
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்!
தாலாட்டு பாடாமல் தூங்காது என் பிள்ளை

இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம், வள்ளுவரின்,

“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”

என்ற குறளை சற்றே மாற்றி,

“இசைப்பின் இசைஞானிபோல் இசைக்க அஃதிலார்
இசைப்பினும் இசைக்காமை நன்று”

என்று வாசிக்கத் தோன்றும். காலையிலோ மாலையிலோ Walking போய்க்கொண்டிருக்கிறீர்கள். இந்தப் பாடலின் Prelude-க்கு முன் இசைஞானி பாடும் அந்த “ஆ…ஆ..ஆ..” ஆலாபனை ஏதோ ஒரு டீக்கடையில் ஒலிக்கக் கேட்கிறது. இப்பொழுது உங்கள் கால்கள் நிற்கவில்லையென்றால், நீங்கள் இன்னும் “வாழவே துவங்கவில்லை” என்று அர்த்தம். அந்த ஆலாபனை முடிந்து துவங்கும் Prelude-ல் ஒலிக்கும் Violin-களும், மற்ற Strings-ம், முக்கியமாக Bass Guitar-ம், தற்கொலை செய்து கொள்ளப் போய்க்கொண்டிருப்பனுக்குக் கூட ‘அடடா! வாழ்க்கை எவ்வளவு அழகானது?’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, வாழ்கின்ற ஆசையையும் நம்பிக்கையையும் கொடுக்கும். இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பாக நான் பார்ப்பது இசைஞானியின் தமிழ் உச்சரிப்பு. ‘உன் விழி ஓடையில்’, ‘உன் கனி விழுமென’ ஆகிய வரிகளில் இசைஞானியின் ‘ழகர’ உச்சரிப்பு அனைத்து பாடகர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. தவிர பாடல் முழுவதும் ஒவ்வொரு வார்த்தையையும் அவ்வளவு தெளிவாக, சுத்தமாக உச்சரித்து பாடலுக்கு அழகூட்டியிருப்பார் இசைஞானி.

இந்தப் பாடலைக் கேட்பவனுக்கு வாழத் தோன்றும் என்பது என் கருத்தாக இருந்தாலும், நடிகர் பார்த்திபன் சற்றே வித்தியாசப் படுகிறார். ஜெயா டி.வி.யின் ‘அன்றும் இன்றும் என்றும் Maestro Live in Concert’-ல் இந்தப் பாடலுக்கு முன் அவர் பேசும் பொழுது,

“சிலருடைய Voice காதுக்கு இதமாயிருக்கும்! சிலருடைய Voice இதயத்துக்கு இதமாயிருக்கும்! ஆனால் மிகச் சிலருடைய Voice தான் Soul-க்கு இதமாயிருக்கும். Company-க்கெல்லாம் Sole Proprietor இருக்கிற மாதிரி இசைக்கு Sole Proprietor திரு. இளையராஜா அவர்கள். சந்தோஷத்திலயே பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா? நான் மணிரத்னம் சார் Direction-ல ஒரு Serial ஒண்ணு Act பண்ணேன். திருமதி. சுஹாசினி மணிரத்னம்-தான் என்னுடைய மனைவியாக Act பண்ணாங்க. அதில ஒரு Scene-ல நான் அவங்க கிட்ட கேட்பேன். “சந்தோஷமா இருக்கா?”னு. அதுக்கு அவங்க சொல்லுவாங்க “செத்துரலாம் போல இருக்கு”ன்னு. அதாவது சந்தோஷத்தோட உச்சத்தில் அப்படி ஒரு Feeling இருக்கும். ‘இப்படியே செத்துட்டா நல்லா இருக்கும் போல இருக்கே?” என்று. அது வந்து இந்தப் பாட்டுக்கு முன்னாடி ராஜா சார் ஒரு ஆலாப் பாடுவாரு. உண்மையிலேயே சொல்றேன். அப்படியே உயிரோட செத்துரலாம் போல இருக்கும். அப்படி ஒரு ஜீவன் அதில இருக்கும்”. என்றார்.

இந்தப் பாடல் என்ன ராகத்தில் அமைந்திருக்கிறது? என்று Net-ல் உலாவித் தேடிய பொழுது “ஹிந்தோளம் [S G2 M1 D1 N2 S | S N2 D1 M1 G2 S] (Mixes Chandrakouns's Ni3)” என்று விடை கிடைத்தது. சரியோ? தவறோ? எனக்குத் தெரியாது. ஆனால் Bracket-க்குள் இருக்கும் “Mixes Chandrakoun’s…” மட்டும் “Mixes இசைஞானியின் ஜீவன்” என்று இருந்திருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும் என்று மட்டும் தெரிந்தது.

1 comment:

  1. “இசைப்பின் இசைஞானிபோல் இசைக்க அஃதிலார்
    இசைப்பினும் இசைக்காமை நன்று”

    நன்று நன்று நன்று.... அருமையான இசை ஒரு மனிதனை எப்படியெல்லாம் மேம்படுத்துகிறது - குறள் கூட எழுத வைக்கிறது

    ReplyDelete