Monday, June 7, 2010

ஓ பட்டர்ஃப்ளை

பாடல் : ஓ பட்டர்ஃப்ளை

படம் : மீரா
பாடியவர்கள் : எஸ்.பி.பி., Asha போஸ்லே
எழுதியவர் :
இசை : இசைஞானி

ஓ! பட்டர்ஃப்ளை! பட்டர்ஃப்ளை!
ஏன் விரித்தாய் சிறகை? வா வா !
ஓ! பட்டர்ஃப்ளை! பட்டர்ஃப்ளை!
ஏன் விரித்தாய் சிறகை?
அருகில் நீ வருவாயோ?
உனக்காக திறந்தேன் மனதின் கதவை!

ஆஹா ஓ! பட்டர்ஃப்ளை! பட்டர்ஃப்ளை!
ஏன் விரித்தாய் சிறகை? வா வா !
எனையும் தான் உனைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்!

1. நெருங்கும்போது அகப்படாமல் பறந்து போகிறாய்!
நிழலைப் போலத் தொடரும் என்னை மறந்து போகிறாய்!
ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே!
ஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே!
உனை நான் சந்தித்தேன்! உனையே சிந்தித்தேன்!
எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ?
பட்டர்ஃப்ளை! பட்டர்ஃப்ளை! - ஆஹா ஓ! பட்டர்ஃப்ளை!

2. மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே!
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே!
ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே!
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே!
உனை நான் கொஞ்சத்தான்! மடிமேல் துஞ்சத்தான்!
தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ?
பட்டர்ஃப்ளை! பட்டர்ஃப்ளை! - ஓ! பட்டர்ஃப்ளை!

Guitar, Violin மற்றும் Flute-ன் அற்புதக் கலவையில் இந்தப் பாடலை இசைஞானி அளித்திருக்கிறார். Guitar (?) உடன் ஆரம்பிக்கும் Prelude-ன் பிற்பகுதியில் Flute ஒலிக்கும்பொழுது அதனுடன் வரும் Guitar-ன் Single Note touches magic உடன் பாடல் துவங்குகிறது. இந்தப் பாடலின் மற்றொரு அற்புதம் Bass Guitar Work. அதிலும் பல்லவியின் முதல் வரியிலேயே, “ஓ! பட்டர்ஃப்ளை! பட்டர்ஃப்ளை!” & “ஏன் விரித்தாய் சிறகை?” வரிகளுக்கு இடையே ஒலிக்கும் Bass Guitar-ன் மூன்றே மூன்று Notes அற்புதமான கலவை. Bass Guitar-ன் அந்த மூன்று Notes-ம் இல்லாமல் பல்லவியின் முதல் இரண்டு வரிகள் சத்தியமாக பூரணம் பெறாது. பல்லவியில் Rhythm-ம் கூட ரொம்ப Soft-ஆக, ஒவ்வொரு Bar-ன் முடிவிலும், மெல்லிய மணியோசையுடன், பாடலின் அழகுக்கு மிகுந்த இடம் விட்டு இசைஞானி அமைத்திருப்பார். ஒரு Simple-ஆன 1-2-3 Waltz Beat-ஐ இசைஞானி ஒருவரால் மட்டுமே இவ்வளவு அழகாக, variety-ஆக Pattern அமைக்க இயலும்.

இந்தப் பாடலில் இசைஞானி Select செய்திருக்கும் Singers!! S.P.B & Asha Bhosle  ! எஸ்.பி.பி.-யின் “Oh Butterfly” Pronounciation-க்கும் Asha Bhosle-வின் “Oh Butterfly” Pronounciation-க்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள். எஸ்.பி.பி. ரொம்ப Style-ஆன Accent-ல் அதைப் பாடி இருக்க, Asha-வின் “பட்டர்ஃப்ளை” (பட்-டர்-ஃப்ளை) ஒரு மழலையின் கொஞ்சல்.

1st Interlude-ல் வரும் Violin-களின் Orchestration-ஐப் பற்றி எழுத்தில் வர்ணிக்க கண்டிப்பாக இயலாததால் மன்னிக்க!

2nd Interlude ஒரு Keyboard Harp (?) Sound-உடன் ஆரம்பிக்க (அது அந்த Interlude முடியும் வரையில் உடன் பயணிக்கிறது), பின் Flutes overlap செய்ய, பின் இரண்டுடனும் சேர்ந்து ஒரு Solo Violin Piece… அதன் பின் பல வயலின்களின் Harmony, இசைஞானியின் Typical overlapping style.

D Minor Scale-ல் அமைந்திருக்கும் இந்தப் பாடலுக்கான Guitar Chords பற்றி என் School Guitar Master ஒருமுறை விளக்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது D Minor 9th என்று ஒரு Chord இந்தப் பாடலில் Apply செய்யப் பட்டிருப்பதின் அழகை சொல்லிக் கொடுத்தார். “பட்டர்ஃப்ளை! பட்டர்ஃப்ளை!” என்று பல்லவி முடியும் Bar-ல், இந்த Chord Application அவ்வளவு ரம்மியம். 3 Chord Theory-உடன் பாடல்களை Guitar-ல் வாசிக்கத் துவங்கி இருந்த எனக்கு இந்த Chord ரொம்ப அழகாகத் தெரிந்தது. [Guitar வாசிக்கத் தெரிந்தவர்களுக்கு – முதல் மூன்று Frets-ல் D Minor Chord பிடித்து வாசிப்போம் இல்லையா? இதில் 1st String-ல் முதல் Fret-ல் உள்ள (Note F) விரலை மட்டும் எடுத்து அந்த String-ஐ open-ஆக வாசியுங்கள்! அது தான் D Minor 9th]. முடிந்தால் Guitar-ஐ எடுத்து பல்லவி முடியும் Bar-ல் இதை இசைத்துப் பாருங்கள்!

சமீபத்தில் KZSU Stanford University Campus FM-ன் ஒரு பழைய நிகழ்ச்சி ஒன்றை வலையில் கேட்க நேர்ந்தது. Mr. Dasarathi என்ற அன்பர் இசைஞானியின் பல்வேறு Style of Music பற்றி பலவித ஆராய்ச்சிகள் செய்து அவற்றை விளக்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது இந்தப் பாடலைப் பற்றிக் கூறி இந்தப் பாடலில் இரண்டாவது சரணம் முடிந்து மறுபடியும் பல்லவி வரும்பொழுது அதனுடன் பின்னால் ஒலிக்கும் Violins & Flutes usage குறித்து சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். “பாடகர்கள் கடைசியில் பல்லவியைப் பாடும்பொழுது Listen to What the Violins and Flutes are doing! That’s a very classical technique used in Western Music known as Chromaticism. This flowing melody is one of those techniques which not a lot of Music Directors use. Ilayaraja is unique in this sense that he has not just used it in one song, but some of the other songs as well. One of the other song in which this appears is “புத்தம் புது காலை! பொன் நிற வேளை”. Another song in which this technique is used is a song sung by உமா ரமணன், “ஆனந்த ராகம், கேட்கும் காலம்” என்று கூறினார். அவர் சொன்னது அழகாக விளங்கினாலும் அது என்ன “Chromaticism” என்று யோசித்து, அதைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் Wikipedi-னேன். “Chromaticism is a compositional technique interspersing the primary diatonic pitches and chords with other pitches of the chromatic scale. Chromaticism is in contrast or addition to tonality or diatonicism (the major and minor scales). Chromatic elements are considered, "elaborations of or substitutions for diatonic scale members." என்று விடை கிடைத்தது. சத்தியமாக எனக்கு விளங்கவில்லை. இந்த definition இசை தெரிந்தவர்களுக்கு!

ஒரு மாலை வேளையில் மழை பெய்து கொண்டிருக்கிறது! வீட்டில் நீங்கள் தனியாக இருக்கிறீர்கள்! ஜன்னலின் அருகில் அமர்ந்து தேங்காய் சட்னியுடன் உளுந்து வடை சாப்பிட்டுக் கொண்டே மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! பூமியின் வாசம் எங்கும் நிறைந்திருக்கிறது! இந்தச் சூழலில் இந்தப் பாடலைக் கேளுங்கள்!!  ! Great is the Maestro!

1 comment: