Monday, June 7, 2010

காதல் ஓவியம்

பாடல் : காதல் ஓவியம்

படம் : அலைகள் ஓய்வதில்லை
பாடியவர்கள் : இசைஞானி, ஜென்சி
எழுதியவர் :
இசை : இசைஞானி

ஓம்…. ஷதபானம் பவதி ஷதாயுப் புருஷத்
ததேந்த்ரியா ஆயுஷ் தேவேந்த் ரிதே ப்ரதி திஷ் டதி!!

ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம். ஓ ஓ…

1. தேடினேன் ஓ என் ஜீவனே
தென்றலிலே மிதந்து வரும் தேன் மலரே
நீ என் நாயகன்! காதல் பாடகன்!
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம் – காதல்

2. தாங்குமோ என் தேகமே?
மன்மதனின் மலர்கணைகள் தோள்களிலே
மோகம் தீரவே! வா என் அருகிலே!
உள்ளம் கோயில்! கண்கள் தீபம்! பூஜை காணலாம் – காதல்

Director பாரதிராஜா Situation சொல்லும்பொழுது இசைஞானியிடம் எப்படிச் சொல்லியிருக்க முடியும்? படத்தின் கதையைச் சொல்லி, “ஒரு பிராமணக் குடும்பத்தின் பையனும், ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தின் பெண்ணும் காதலிக்கிறார்கள். ஒரு Duet Song வேண்டும்!” என்று சொல்லியிருக்கக் கூடும். இதில் இசைஞானி செய்திருக்கும் வேலைகளைக் கவனியுங்கள். பாடல் ஒரு ஸ்லோகத்துடன் துவங்குகிறது. அதன் பின்ணனியில் ஒரு கோவில் மணியோசை கேட்கிறது. ஸ்லோகம் முடிந்தவுடன் வேறு எந்த Lead-ம் இல்லாமல், Choral Voices… அதனுடன் Counterparts…Harmony!! எல்லாம் சேர்ந்து ஒரு Church Effect கொடுப்பதற்காக Chorus முடிவில் ஒரு ஆலய மணியோசை. அதன் பின் வீணையில் ஒரு சின்ன Piece. படத்தின் மொத்தக் கதையையும் இந்த Prelude-ல் இசைஞானி சொல்லி முடித்திருப்பார்.

இந்தப் பாடலின் Rhythm Pattern…!! Keyboard வைத்திருப்பவர்கள் உங்களது Keyboard-ன் “Style” Folder-ஐ திறந்து அதில் “Bossa Nova” என்று ஒரு Rhythm இருக்கும். தேடிப் பாருங்கள்! Normal-ஆக திரை இசையில் இந்த Rhythm-ஐ வேறு எந்தப் பாடலிலும், யாரும் Use பண்ணியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவ்வளவு அழகான ஒரு Pattern. அதை இசைஞானி அவ்வளவு அழகாகப் பிரயோகித்திருப்பார்.

நான் College-ல் படிக்கும்பொழுது, Annual Day-ன் போது Orchestra-வுடன் இந்தப் பாடலைப் இசைத்தோம். Keyboard-ல் நான்!! Keyboard வாசிக்கும் வேலையுடன், பாடலின் முதலில் வரும் ஸ்லோகம், Choral Voices-ல் வரும் ஒரு Counterpart, அதன் பின் “தேன் சிந்தும் பூஞ்சோலை”-யின் பின் வரும் Humming (False Voice-ல் – ஒரு பெண் குரல் Effect உடன்), Interludes-ல் வரும் Chorus Humming (இதுவும் False Voice-ல்), இவை அனைத்தையும் சேர்ந்து பாட வேண்டியது என் வேலை. (எங்கள் குழுவில் இருந்தது ஒரே ஒரு Female Singer! எனவே இந்த Chorus எல்லாம் எங்கள் குழுவின் Guitarist-ல் இருந்து, Drummer வரை அனைவரும் சேர்ந்து பாடியாக வேண்டிய கட்டாயம்) எல்லாம் ஒரு வழியாக practice செய்து முடித்து விட்டாலும், இந்தப் பாடலின் முதலில் வரும் ஸ்லோகம் ஆரம்பிக்கும் Note-ஐ எப்படி எடுப்பது என்று எனக்கு ஒரே குழப்பம். ஏனென்றால் அந்த ஸ்ருதியைப் பிடித்துத்தான் அதன் பின் வரும் Chorus Harmony பாடப்படும். Keyboard-ல் Key-ஐத் தொடாமல், சரியாக அந்த Note-ல் ஸ்லோகத்தை ஆரம்பிக்க என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது, எங்கள் குழுவில் அடிக்கடி வந்து உதவி செய்யும் ஒரு Guitarist அண்ணன் எனக்கு ஒரு Trick-ஐ சொல்லிக் கொடுத்தார். Prelude-ல் வரும் Chorus Voices-ல் நான் பாட வேண்டிய Counterpart ஆரம்பிக்கும் முதல் Note-ல் ஸ்லோகத்தை ஆரம்பித்தால், சரியாக இருக்கும் என்பதுதான் அது. அதையே பின்பற்றி நான் ஆரம்பிக்க பாடல் மிக சிறப்பாக வந்தது.

இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பம்சம் Bass Guitar! முக்கியமாக பல்லவியில் “என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்” என்ற வரியில், “ஆனந்தம்” “பேரின்பம்” என்ற வார்த்தைகளின் பின்னால் இசைக்கப்படும் Bass Guitar-ஐ கவனித்துக் கேளுங்கள். வெறும் நான்கு Notes தான். அது அந்த வரிக்கு என்ன அழகு சேர்க்கிறது! ஒரு பாடலை Blank-ஆகக் கேட்பதற்கும், இசைஞானியின் Orchestration-உடன் கேட்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? வெறும் சோறு சாப்பிடுவதற்கும், அம்மா கையால் சோறு சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம்தான். 1st Interlude ஆரம்பிப்பதே Bass Guitar-ல் தான். அதன் பின் குயில் கூவுவது போலப் புல்லாங்குழலில் ஒரு Note ஒலித்துக் கொண்டேயிருக்க, அதன் பின்னால் இசைஞானி அமைத்திருக்கும் Bass Guitar சரம்.. அதேபோல் 2nd Interlude-ல் வீணையுடன் Bass Guitar-ல் அமைத்திருக்கும் Orchestration.. சரவெடி.. அதை வார்த்தைகளில் விளக்குவது இயலாத காரியம்.

டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா ஒரு முறை இசைஞானியைப் பற்றி ஸ்லாகித்து இப்படிக் கூறியதாக ஒரு Online Community-ல் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். “As far as I am concerned, Ilayaraja is the Composer of the Century. If there is one single authority on ‘orchestration’, it can only be Ilayaraja” [“எனக்குத் தெரிந்த வரையில், இளையராஜா இந்த நூற்றாண்டின் இசையமைப்பாளர்! ‘Orchestration’ என்ற விஷயத்திற்கு ஒரு அதிபதி உண்டென்றால், அது இசைஞானி இளையராஜாவாக மட்டும் தான் இருக்க முடியும்”]. சத்தியமான வார்த்தைகள்!!

2 comments: